ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் இன்று அறிவிப்பு?

Default Image

இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BY ELECTION

இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவை பொறுத்தவரையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை இருதரப்பிலும் வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்பும்வெளியாகவில்லை.

sengottaiyanerode

இதற்கிடையில், நேற்று ஈரோட்டில் அதிமுக பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்  செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், இன்று காலை தேர்தல் பணிமனை திறக்கப்படும் என்று அதன்பின் மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பால் இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்