ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை!

Default Image

ஈரோடு மாவட்டம் கோபியில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதன் ஆலோசகராக புஷ்பராஜ் இருந்து வந்தார். ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதற்காக, 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம், புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால், ஒப்புதல் அளிக்க தங்கவேல், ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார், மறைந்திருந்து, தங்கவேல் லஞ்சம் பெறும் போது, கையும் களவுமாக கைது செய்தனர்.

இவ்வழக்கு ஈரோடு முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சார் பதிவாளர் தங்கராஜிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்