இபிஎஸ் ராஜினாமா செய்யவேண்டும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்.!

Published by
மணிகண்டன்

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திசிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை மற்றும் மருந்து இருப்பு விவரங்களை பற்றி விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி இதுவரை 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் 206, பெண்கள் 12, 1 திருநங்கை ஆவர். இதில் 3 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் . மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதில் 18பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு சென்று பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர். Omeprazole கையிருப்பு இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், உண்மையில், 4.42 கோடி அளவில் இருப்பில் உள்ளது. அது அல்சர் போன்ற நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து.

அதே போல Fomepizole எனும் மருந்து கையிருப்பு இல்லை என கூறினார்.  அது ஒரு ஊசி மருந்து ஆகும். ஒன்றின் விலை 6,700 ரூபாய் ஆகும் . அதனை தமிழக அரசு போதிய அளவு வாங்கி கையிருப்பில் வைத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு தயார் . இதோ நான் கூறுகிறேனே இதுதான் வெள்ளை அறிக்கை.

சேலம் உங்கள் சொந்த மாவட்டம் தான். உங்கள் ஆட்களை அனுப்பி மருத்துவமனைகளில் எவ்வளவு மருந்து இருப்பு இருக்கிறது என விசாரணை செய்ய சொல்லுங்கள். பொய்யான தகவலை கூறி மக்களை பதட்டமான சூழ்நிலைகு உள்ளாக்கி வருகிறார். மருந்துகள் போதிய இருப்பு இல்லாததால் தான் இறப்புகள் அதிகமாகிறது என இபிஎஸ் கூறுகிறார். ஆனால் மருந்துகள் போதிய கையிருப்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் .

Published by
மணிகண்டன்

Recent Posts

மோர் களி ரெசிபி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி  செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…

3 minutes ago

உடலில் ரத்த அளவை அதிகரிக்கும் சிறந்த 10 உணவுகள்..!

உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…

33 minutes ago

கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்! ரூ.1 கோடி பரிசு வழங்கிய உதயநிதி!

சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது  உலக…

34 minutes ago

“அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம்.. காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது” – பிரதமர் மோடி!

டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…

1 hour ago

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ‘அதிக பாவங்கள் செய்பவர்கள்’… அமித் ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.!

சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…

2 hours ago

ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் – இரு அவைகளும் ஒத்திவைப்பு!

டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…

3 hours ago