இபிஎஸ் ராஜினாமா செய்யவேண்டும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்.!

Published by
மணிகண்டன்

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திசிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை மற்றும் மருந்து இருப்பு விவரங்களை பற்றி விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி இதுவரை 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் 206, பெண்கள் 12, 1 திருநங்கை ஆவர். இதில் 3 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் . மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதில் 18பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு சென்று பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர். Omeprazole கையிருப்பு இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், உண்மையில், 4.42 கோடி அளவில் இருப்பில் உள்ளது. அது அல்சர் போன்ற நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து.

அதே போல Fomepizole எனும் மருந்து கையிருப்பு இல்லை என கூறினார்.  அது ஒரு ஊசி மருந்து ஆகும். ஒன்றின் விலை 6,700 ரூபாய் ஆகும் . அதனை தமிழக அரசு போதிய அளவு வாங்கி கையிருப்பில் வைத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு தயார் . இதோ நான் கூறுகிறேனே இதுதான் வெள்ளை அறிக்கை.

சேலம் உங்கள் சொந்த மாவட்டம் தான். உங்கள் ஆட்களை அனுப்பி மருத்துவமனைகளில் எவ்வளவு மருந்து இருப்பு இருக்கிறது என விசாரணை செய்ய சொல்லுங்கள். பொய்யான தகவலை கூறி மக்களை பதட்டமான சூழ்நிலைகு உள்ளாக்கி வருகிறார். மருந்துகள் போதிய இருப்பு இல்லாததால் தான் இறப்புகள் அதிகமாகிறது என இபிஎஸ் கூறுகிறார். ஆனால் மருந்துகள் போதிய கையிருப்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் .

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

24 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

46 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

1 hour ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

3 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago