அனைத்துக்கட்சி கூட்டம்.! இபிஎஸ்க்கு அழைப்பு.. ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை.! ஜெயக்குமார் விமர்சனம்.!

Default Image

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். 

இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது.

இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார். அதே போல அதிமுக சார்பில் அழைப்பு எடப்பாடி பழனிசாமிக்கு வந்துள்ளது.

இதனை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில் , அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்துள்ளளது. ஓபிஎஸ் (பன்னீர்செல்வதிற்கு) அழைப்பு வரவில்லை என சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு வந்துள்ளது. என ஜெயலலிதா நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக டெல்லி புறப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்