இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மகள் திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினர.
இதில் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவை அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்ததாகவும் அதிமுக உட்கட்சித் தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அதிமுக இரு கண்களாக உள்ளன. அதிமுகவின் கண்ணும் இமையும் போல இரட்டை தலைமை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…