இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மகள் திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினர.
இதில் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவை அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்ததாகவும் அதிமுக உட்கட்சித் தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அதிமுக இரு கண்களாக உள்ளன. அதிமுகவின் கண்ணும் இமையும் போல இரட்டை தலைமை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…