இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மகள் திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினர.
இதில் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவை அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்ததாகவும் அதிமுக உட்கட்சித் தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அதிமுக இரு கண்களாக உள்ளன. அதிமுகவின் கண்ணும் இமையும் போல இரட்டை தலைமை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…