ஆம்ஸ்ட்ராங் கொலையில் சந்தேகங்கள் சரிதான்.? இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

சென்னை: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 8 பேர் சரணடைந்து உள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி பின்னர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் தங்கள் இரங்லை தெரிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், கடந்த ஒரு மாத காலத்திற்குள் நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் கழக (அதிமுக) பகுதி செயலாளர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. அரசியல் தலைவர்கள், மக்கள், பெண்கள் என யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இந்த கொலைக்கு பின்னர் பலர் இருப்பதாக BSP தொண்டர்கள், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை, இந்த படுகொலையின் போது கிடைத்த சிசிடிவி காட்சியை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம் . அரசு எடுத்த நடவடிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. அதனை பார்க்கும் போது இவர்களின் சந்தேகம் சரிதான் என தோன்றுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் தான் நியாயம் கிடைக்கும். உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்த இடத்திலும் யாருடனும் பிரச்சனை கிடையாது. இந்த கொலைக்கு பின்னால் சாதாரண ஆள் குற்றவாளி அல்ல. பின்னணியில் எதோ இருக்கிறது அதனை இந்த அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago