கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி ஆளுநர் மாநிலகையில் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், முக ஸ்டாலினுடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
புதிய அரசு பதவியேற்பு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினேன். நோயாளிகள் அதிகரித்து வருவதால் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்ற மருந்து பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…