பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலைகழகம்

Default Image

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. எனவே தேர்வுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.

தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் உட்பட அனைத்து தேர்வுகளும் வகுப்பறையில் நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் மற்றும் செய்முறை தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து, மாணவர்கள் நேரடி தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.  இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுகையில்,  டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 27-ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்