இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும்.
அம்பாசமுத்திரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டமானது சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை இரண்டும் வெற்றி வாய்ப்பு காரணமாக இருக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை மக்களுக்கு தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுத்துரைத்து, எதிரிகளை விஞ்ஞான முறைப்படி முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இளைஞர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் தொகுதிக்கு 7,500 பேர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் இளைஞர் பாசறை உள்ளனர். அவர்கள் மக்களிடம் அரசின் திட்டங்களை சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும் என்றும், சாதிக்கவும், சாதனை புரியப் பிறந்தவர்கள் இளைஞர்கள் என்றும், தமிழகம் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…