மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மராய்ந்தார். இவரது மறைவு அரசியல் பிரபலங்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு, ஜெயலலிதாவின் உறவினரான தீபா எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, தமிழக அரசு போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது.
இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், போயஸ் தோட்டம் அமைந்துள்ள இடத்தின் நிலத்தின் அடியில், எவ்விதமான கனிம வளங்களும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…