மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மராய்ந்தார். இவரது மறைவு அரசியல் பிரபலங்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு, ஜெயலலிதாவின் உறவினரான தீபா எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, தமிழக அரசு போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது.
இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், போயஸ் தோட்டம் அமைந்துள்ள இடத்தின் நிலத்தின் அடியில், எவ்விதமான கனிம வளங்களும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…