அவசரகால ஆம்புலன்ஸ் சேவை – முதல் பெண் ஓட்டுநராகிய வீரலட்சுமி!

அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில் முதல் பெண் ஓட்டுநராகிய தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி.
சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 118 மற்றும் 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஆம்புலன்ஸ் பணிகளை நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வீரலெட்சுமி எனும் பெண் அவசரகால ஆம்புலன்ஸ் ஓட்டும் பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்துள்ளார்.
இந்நிலையில் இவரது சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டு அவருக்கு தேனியில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது துவங்கிவைக்கப்பட்டுள்ள அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு முதல் பெண் ஓட்டுநராக தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி அவர்கள் தேர்வுசெய்யப்பட்டு தனது பணியை துவங்கி உள்ளார்.