48 நாட்கள் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான இந்த முகாம் துவங்குகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி என்னுமிடத்தில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடத்த வேண்டும் என தமிழக அரசால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான அரசாணையும் அன்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடைபெறக்கூடிய இந்த சிறப்பு முகாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட யானைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், கொரோனா பரிசோதனை செய்து, மருத்துவர் சான்றிதழ் இல்லாத ஏழைகளுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யானைகளுடன் முகாமிற்கு செல்லக்கூடிய பணியாளர்களும் கொரோனா பரிசோதனை செய்து அதன் பின்புதான் யானைகளுடன் நலவாழ்வு முகாமில் பங்கு பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இதற்கான முதல் நாள் முகாம் பவானி ஆற்றுப் படுகையில் துவங்க உள்ளது. 48 நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று காலை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் துவங்க உள்ளது. இதில் புதுச்சேரி, அறநிலையத்துறை கோவில்கள், திருமடங்கள் ஆகியவற்றில் உள்ள பல்வேறு யானைகள் பங்கேற்க உள்ளன. யானையை அழைத்து வரக் கூடிய வழியில் மின்கம்பிகளை கவனித்து பாதுகாப்பாக வரவேண்டும் எனவும், கொரோனா வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…