பொது தேர்வுகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் – தொடக்ககல்வி இயக்குனர்

Default Image

பொது தேர்வுகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணியில் முன்னுரிமை வழங்கலாம் என்றும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar