அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

Default Image

மின்கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் அதிமுகவினர் காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வை பற்றி ஏன் பேசவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி. 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் மாநகராட்சி வளாகத்தில் சென்னையில் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது.  ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு இருப்பதற்கு கட்டணமும் வாடகையும் நிச்சயம் வசூலிக்க படாது. அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை நமக்கு நாமே உற்பத்தி செய்து வருகிறோம். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழ்நாடு மின் முக்கிய மாநிலமாக திகழ்ந்தது என்று பொய்யான செய்தியை அதிமுகவினர் பரப்பு வந்தனர்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், தற்போது ஒரு லட்சம் இலவசம் மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் அதிமுகவினர் காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வை பற்றி ஏன் பேசவில்லை. மத்திய அரசை கண்டு அதிமுக பயப்படுகிறது மத்திய அரசு எதிர்க்கக்கூடிய தைரியம் இல்லாத சூழ்நிலையில் அதிமுக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்