கொரோனா அச்சுறுத்தலால் நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20ம் தேதி வரை பொதுமக்களுக்கு முழுமையாக அனுமதி இல்லை என்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினர் என பல முக்கிய துறைகளை சார்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் ரயில்வே நிர்வாகம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ரயிலில் பயணம் செய்ய வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…