தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பின்னர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தேர்வு எழுந்தும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு நடைபெறும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தீவிரம் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…