திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு ஆதரவு.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சுவார்த்தை நடத்திருந்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விரிவாக விவதித்தோம் என தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு உங்களது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கீடு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மதவாத சக்திகளுக்கு எதிரான வாக்குகள் சிதறி போகக்கூடாது என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவை வழங்கிருக்கிறோம். ஐந்து அம்ச கோரிக்கைகளில் பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை விடுதலை செய்யவேண்டும். பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். நீதியரசர் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமல்படுத்த வேண்டும்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதியை வழங்கிட வேண்டும். அதேபோல் முஸ்லீம் மக்களின் இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இறுதியாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் என்று புதிதாக அமையக்கூடிய அரசு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை தமிமுன் அன்சாரி முன்வைத்துள்ளார்.
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…