#ElectionBreaking: போடிநாயக்கனுரில் 3வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் வட்டாச்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். போடி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கழக தலைமை ஆணையிட்டிருந்தது. அதனை ஏற்று இன்று நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு போடி சட்டமன்ற தொகுதியில் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கி அப்பகுதி மக்கள் அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவைகளை செய்துள்ளேன்.

இரண்டு முறை என்னை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், மக்களுக்கு சேவை புரிவதே குறிக்கோளாக கொண்டு மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளேன். மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளோம். ஆகையால், மீண்டும் அம்மாவின் அதிமுக ஆட்சியை அமைய செய்வார்கள் என கூறியுள்ளார். இதனிடையே, போடிநாயகனுர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago