#ElectionBreaking : தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அமைச்சர் பெயர் எழுதப்பட்ட டைரி…!

Published by
லீனா

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது.

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அதிமுகவினரிடம் இருந்து கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரமேஷ் என்பவர் கொண்டு சென்ற காரில், அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி  சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த டைரியில் பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல்கள் டைரியில் எழுதப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் பட்டியலும் எழுதப்பட்டுள்ளது. அந்த டைரியில் விராலிமலை தொகுதியில் உள்ள பகுதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தொகுதி முழுவதும் பணம் மற்றும் பொருட்கள் வழங்க விஜயபாஸ்கர் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து, காரை ஒட்டி வந்த ரமேஷ் என்பவரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய டைரி அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி என அதிகாரப்பூர்வமாக இன்னும் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

6 minutes ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

6 minutes ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

35 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

1 hour ago

ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு போகாதீங்க! அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

1 hour ago

அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…

2 hours ago