சென்னையில் நடைபெற்ற அமமுக பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அமமுக பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த தேர்தல் அறிக்கையின் படி, ஆண்களுக்கும் இருசக்கர வாகனத் திட்டம் விரிவுபடுத்தப்படும், பேரூராட்சி/ஊராட்சி தோறும் அம்மா உணவகங்கள் நிறுவப்படும், தமிழர் பண்பாட்டு திருவிழாவாக ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும்,அரசு நிதியுதவி வழங்கும். மாதானதொரும் மின்கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும். 6-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
திருமண உதவித்தொகை 25 ஆயிரத்தில் இருந்து 50,000- ஆகவும், 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும் உயர்த்தப்படும். மாதத்திற்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். மது உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும். தமிழக வேலைவாய்ப்பில் 85% தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் கொண்டு வரப்படும் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…