மொத்தம் 837 பேர் வேட்புமனு தாக்கல்… நெல்லையில் 34 பேர் போட்டி…

Published by
மணிகண்டன்

Election2024 : தமிழகத்தில் தற்போது வரையில் 837 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் , புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் கன்னியகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆகியவைகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டமாக நடைபெறும் இந்திய மக்களவை தேர்தலில் இதுதான் முதற்கட்ட தேர்தல் என்பதாலும், நாட்கள்  மிக குறைவாகவே இருந்ததாலும் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபாட்டு வந்தனர்.

கூட்டணி , தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என நாட்கள் குறைவாக இருந்ததால், கடந்த மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனுக்கள் அளிக்க காலஅவகாசம் தொடங்கிய நிலையிலும் கடந்த வாரம் வேட்பாளர்கள் குறைவான அளவிலேயே வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.

அதன் பிறகு நேற்று  முன்தினம் (திங்கள்) பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், அன்றைய தினம் மட்டுமே சுமார் 400க்கும் அதிகமானோர் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று (மார்ச் 27) பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளதால், அதற்குள் தேர்தல் அலுவலகம் வந்தர்களிடம் டோக்கன் கொடுக்கப்பட்டு அதற்கு பின் வந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிற்பகல் 3 மணி வரையில் தமிழகத்தில் 837 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 34 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்து வடசென்னையில் 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். டோக்கன் வாங்கியவர்கள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளை (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வரும் 30ஆம் தேதி மாலைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறுவோர் பெற்றுக்கொள்ளலாம். அதனை அடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

34 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

38 mins ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

2 hours ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

3 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago