ஒரு பதவிக்கு 2 பேருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அதிகாரிகள்.!

Published by
murugan
  • தமிழகத்தில் நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி மற்றும்  பிரியதர்ஷினி  வெற்றி பெற்றதாக வெற்றிச்சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு  2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டார்.

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னணி நிலவரம் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது.இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு வெற்றிச்சான்றிதழும் கொடுக்கப்பட்டது.

இதனால் எதிர்தரப்பினருக்கும் , தேவி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரியதர்ஷினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என கூறினர்.

இதனால் அதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை சென்றது.பின்னர் வெற்றிச் சான்றிதழ் பெற்று விட்ட தேவி தரப்பினர் சென்று விட்டனர். ஆனால் எத்தித்தரப்பினர்  அங்கேயே அமர்ந்திருந்தனர். இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேவி தரப்பினர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்படி அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை.

பின்னர் காலை 5 மணிக்கு பிரியதர்ஷினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 பெண்களுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

17 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago