இடைத்தேர்தல் பணிகள் தொடக்கம்.! அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை.!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக, தேர்தல் அலுவலர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி கலந்தாலோசிக்க உள்ளனர்.