நேற்று துப்பரவு பணியாளராக இருந்தவர் இன்று அந்த ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவரான ருசீகர சம்பவம்..

Default Image
  • நேற்று துப்புரவு பணியாளர் இன்று ஊராட்சி மன்ற தலைவர்.
  • மனம் மகிழவைக்கும் மகத்தான சம்பவம்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா  கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில்  அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி.  சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை துறந்து விட்டு தேர்தலில் களமிறங்கி, அந்த பகுதி மக்கள் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற  தலைவராக தேர்வாகி உள்ளார். ஊராட்சி துப்பரவு தொழிலாளியான இவர் தற்போது அந்த ஊராட்சி மன்ற தலைவராக இவர் தேர்வாகியிருப்பது அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்