தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவினால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணி இடத்தை இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை 10 ஆண்டுகால ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனாலும், கடந்த தேர்தலின் போது அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை வரவிட கூடாது என கூறியுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இரண்டாவது அலை வந்திருப்பது கவலையளிக்கிறது என கூறினார்.
மேலும், தேர்தல் முக்கியம், பிரச்சாரம் முக்கியம், அதே நேரத்தில் உயிரும் முக்கியம் என கூறி, தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவினால் மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அதிகாரிகள், தலைமை செயலாளர் தலைமையில் முடிவு எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…