தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு,எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானார்.அதன் பின்னர்,மே 10, 2021 அன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி பதவியை ராஜினமா செய்தனர்.
மேலும்,அவர்கள் மூன்று பேருடைய பதவிக்காலம் முறையே 24.7.2025, 29.06.2022 மற்றும் 02.04.2026 ஆகிய தேதிகளில் முடிவடையவுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி உடனடியாகத் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றும்,அதற்கான தேர்தல் அறிவிப்பை தனித்தனியாக வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர்களிடம் டி.ஆர்.பாலு, வில்சன் ஆகியோர் கடந்த மாதம் நேரில் வலியுறுத்தினர்.
இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…