#Election:திமுக உட்கட்சி தேர்தல் தேதி – தலைமைக் கழகம் அறிவிப்பு!

Default Image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட பேரூர்,நகரங்களுக்குட்பட்ட வார்டுக் கழகத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.குறிப்பாக,தலைமைக் கழத்தால் அறிவிக்கப்படும் ‘தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையாளர்களைக் கொண்டு இத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் படிவம் ஒன்றுக்கு ரூ.1/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும்,அச்சிட்ட படிவம் இல்லாவிடில் ஜெராக்ஸ் (Xerox) எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,அவைத் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பதிகளுக்கான விண்ணப்ப கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்