#BREAKING: பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு..?

Default Image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறயுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து, அரசியல் கட்சியினர், தங்களது கூட்டணி மற்றும் பிரச்சார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி தேர்தல் தேதியை முடிவு செய்யும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும், ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்