தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… தேர்தல் ஆணையம் தகவல்.!

Election Commissioner - Sathya Pratha Sahoo

Election2024 : தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடங்கி திருச்சி, ஈரோடு, கோவை  என பல்வேறு பகுதிகளில் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தபால் வாக்குகளை பெற தமிழ்நாடு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு குறித்த இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது தமிழக்த்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குசாவடிகளில் 8050 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்றும், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் ஆலோசனை கூட்டத்தில் அறியப்பட்டுள்ளன.

மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், சிசிடிவி கேமிரா கண்காணிப்பு அதிகப்படுத்துவது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு , துணை ராணுவம் பாதுகாப்பு ஆகியவற்றை அதிகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்