திருச்சியில் தேர்தல் ரத்து….! வதந்தியை நம்ப வேண்டாம்…! – திருச்சி மாவட்ட ஆட்சியர்

Published by
லீனா

திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.ர் அந்த வகையில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் ஐந்து காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது தெரிய வந்ததை அடுத்து, அங்குள்ள காவல் நிலையங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கவர்கள் சிக்கியுள்ளது.

அந்தக் அவர்களில் பதவிக்கு ஏற்ப ரூ 2,000 முதல் 10,000 வரை வைக்கப்பட்டிருந்தது இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த கவர்கள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல்கள் ரத்தாகும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முசிறி மற்றும் மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இதுவரை ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா தொடர்பாக திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், அதிகாரபூர்வ தகவல் வந்தால், நாங்கள் மக்களுக்கு என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

7 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

8 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

9 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

10 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

11 hours ago