புற்றுநோயால் இறந்த மூத்த மகன் – தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

Published by
Rebekal

மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 38 வயதுடைய முருகன் என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி கோகிலா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர்களுக்கும் மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் எனும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் மூத்த மகன் மதன்குமார் சில ஆண்டுகளாக ரத்த புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மதன்குமார் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதன்குமார் இழப்பு குடும்பத்தினருக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும் அடுத்த இரு மகன்களை நினைத்து குடும்பம் அழகாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால், முருகன் கோகிலா ஆகிய இருவருக்கும் மூத்த மகனின் நினைப்பு சற்றும் அழிக்கப்படாமல் இருந்ததால் அடிக்கடி மகனின் புகைப்படத்தை செல்போனில் பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர்.

மகன் இறந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களது மன அழுத்தம் காரணமாக அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகனுக்கு தம்பதிகள் இருவருமாக சேர்ந்து முடிவெடுத்து டீயில் விஷம் கலந்து கொடுத்து அவர்களை குடிக்க வைத்துள்ளனர். அதன்பின் இருவரும் உயிரிழந்துள்ளனர், பின்னர் அவர்களும் அந்த டீயை குடித்து தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் அவர்கள்  டீயில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மூத்த மகன் இழப்பு தாங்க முடியாமல் மன அழுத்தத்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

6 minutes ago

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

11 minutes ago

TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…

16 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

44 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

1 hour ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

1 hour ago