கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இந்நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர் ஜாமீன் மனுக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு கூறினார். இன்று அது விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து காவல் துறை தரப்பு கூறுகையில், இவர் கொரோனா பதற்ற நிலையை லாபமீட்டும் நோக்குடன் பயன்படுத்தினார். இவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் மேலும் இவர் பெற்றதாக கூறும் சித்த மருத்துவ கவுன்சிலின் சான்றிதழ் போலியானது என தெரிவித்தனர்.
மேலும் திருதணிகாசலம் தரப்பில் கூறுகையில், சித்த மருத்துவமனையில் பட்டம் பெற்றதாக தான் கூறவில்லை எனவும் பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த மூலிகையைத் உள்ளதாகவும் கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…