கல்விக்கொள்கை.., பொக்ரியாலுக்கு அன்பில் மகேஷ் கடிதம்..!

Default Image

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த “கல்விக் கொள்கை-2020” -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு  ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.

2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நாளை  அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அரசின் சார்பில் மிக முக்கிய கருத்துக்கள், பரிந்துரைகளை தெரிவிக்க தயார் என அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை எக்காரணத்திலும் அமல்படுத்த விடமாட்டோம் என கடந்த வாரம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்