உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்தல், திருவள்ளுவர் சிலைக்கு சாயம் பூசுவது போன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில், சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் புகைப்படமானது அவர் முடியற்ற நிலையில், தலையில் வழுக்கையுடன், காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் இருப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த செயலை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருந்துங்கள், இல்லையேல் திருத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…