இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான், பொதுச்செயலாளர் தான்… இபிஎஸ் பேச்சு!

Published by
பாலா கலியமூர்த்தி

Edappadi Palaniswami: அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்று  செயல் வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் களமாக மாறியுள்ளது. இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ்க்கு ஆதரவு அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் அலை தான் வீசுகிறது. என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம், நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன்.

பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தது அதிமுக. அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை உபரி நீர் திட்டப்பணிகளை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு முடக்கி வைத்துள்ளது என குற்றசாட்டை முன்வைத்த இபிஎஸ், எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை.

இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான், கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்றும் சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Recent Posts

AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…

35 minutes ago

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

2 hours ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 hours ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

3 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

5 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

5 hours ago