எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Default Image

எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? என பேசியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார்; ஒரு புறம் சனாதனம்,மனுநீதி பேசுகின்றவர்கள் உடன் கைகோர்த்து கொண்டு, மறுபுறம் திராவிடம் என பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்