அதிமுகவை அழிக்கவந்த பச்சை துரோகி எடப்பாடி பழனிசாமி – ஜே.எம்.பஷீர் குற்றசாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக என்ற கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி என்று தெரிவித்து, இதன்தொடர்பான ஆதாரத்தை வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, செய்தியாளர்களிடம் பேசிய தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் ஜே.எம்.பஷீர், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்து கொண்டியிருப்பதாகவும், அதிமுகவை அழிக்கவந்த பச்சை துரோகி என்றும் குற்றசாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதிவில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது. சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது.

ஓபிஎஸ் கருத்து தெரிவித்த 4 நாட்கள் ஆகியும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். அதிமுக என்ற கட்சி நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றாலும், உடனடியாக அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனிடையே, கழக கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் ஜே.எம்.பஷீர் கட்சியில் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சில நிமிடங்களில் ஜே.எம்.பஷீர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

31 minutes ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

1 hour ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

2 hours ago

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

3 hours ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

3 hours ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

4 hours ago