எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்றது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் குறித்து நேற்று ஆலோசனையில் நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என கூறினார். ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதால், எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம், இதனால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார்
இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படை இல்லாமலும் பேசுகிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்பு கூறியிருந்த குற்றசாட்டு எப்படி அடிப்படை உண்மையில்லை என்பதை போன்று, இதுவும் அடிப்படை ஒரு ஆதாரமற்றது தான். ஒருவேளை அவர், எம்பி தேர்தல் தான் வருகிறது என்பதை சொல்லியிருக்கிறாரா என்பது தெரியவில்லை என கூறினார்.
பொதுவாக எல்லாவற்றையும், அடிப்படை இல்லாமல் ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டு கூறுவது எடப்பாடி பழனிசாமிக்கு பழக்கமானதால் அவர் அப்படிப்பட்ட கனவு கோட்டையில் இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…