எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்றது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் குறித்து நேற்று ஆலோசனையில் நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என கூறினார். ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதால், எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம், இதனால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார்
இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படை இல்லாமலும் பேசுகிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்பு கூறியிருந்த குற்றசாட்டு எப்படி அடிப்படை உண்மையில்லை என்பதை போன்று, இதுவும் அடிப்படை ஒரு ஆதாரமற்றது தான். ஒருவேளை அவர், எம்பி தேர்தல் தான் வருகிறது என்பதை சொல்லியிருக்கிறாரா என்பது தெரியவில்லை என கூறினார்.
பொதுவாக எல்லாவற்றையும், அடிப்படை இல்லாமல் ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டு கூறுவது எடப்பாடி பழனிசாமிக்கு பழக்கமானதால் அவர் அப்படிப்பட்ட கனவு கோட்டையில் இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…