கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியேற முடியாது – புகழேந்தி

Published by
லீனா

கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியேற முடியாது என புகழேந்தி பேட்டி. 

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் ஓபிஎஸ்  ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடிபழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும். அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளில் இடம் இருக்கிறது.

நான்கு வருடத்தில் கொள்ளை அடித்தவர்கள் தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். அதிமுகவில் நிலவும் ரவுடிசத்துக்கு காரணம் ஜெயக்குமார் தான் என தெரிவித்துள்ளார். மேலும், பழனிசாமி தலைமையில் கட்சி சின்னாபின்னமாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது; 500 ஓட்டு கூட வாங்க முடியாது.

இந்த கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியேற முடியாது கட்சியில் இருந்து என்னை நீக்கியவர்களில் ஒருவராக ஓ.பி.எஸ். இருந்தாலும் ஒரு நல்ல தலைவராக அவரை பார்க்கிறேன். என்னுடைய அண்ணனாக அவரை நினைத்து இந்த இடத்தில் நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago