தமிழக முதல்வர் – கேரளா முதல்வர் சந்திப்பு! நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய ஆலோசனை!

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கேரளா புறப்பட்டு சென்றார். தற்போது அவர் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதில் முக்கியமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட கொள்கைகள் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், பரம்பிக்குளம் – ஆழியாறு மற்றும் ஆனைமலை – பாண்டியாறு – புன்னம்புழா இணைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் உடன் சென்றனர். அவர்கள் இன்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பி வரவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்