ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு.., நீதிமன்றம் நோட்டீஸ்..!

Published by
murugan

எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில், அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் இந்த விதியை திருத்தமுடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பொதுச்செயலாளரை நீக்கியது கட்சிக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு, செயற்குழு நியமித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதிவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் நடைமுறையில் உள்ள இரட்டை தலைமையையும் உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் கடந்த 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சிதேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் தேர்தலை நடத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு ஓராண்டிற்கு மேல் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவிற்கு ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Published by
murugan

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

8 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

8 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

9 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

10 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

10 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

12 hours ago