ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு.., நீதிமன்றம் நோட்டீஸ்..!

Published by
murugan

எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில், அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் இந்த விதியை திருத்தமுடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பொதுச்செயலாளரை நீக்கியது கட்சிக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு, செயற்குழு நியமித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதிவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் நடைமுறையில் உள்ள இரட்டை தலைமையையும் உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் கடந்த 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சிதேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் தேர்தலை நடத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு ஓராண்டிற்கு மேல் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவிற்கு ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago