#Breaking : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாள்.! இபிஎஸ் தரப்பினர் புறக்கணிப்பு.!

Default Image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரான முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்ற கோரி சபாநாயகரிடம், இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதுகுறித்து, இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் இபிஎஸ் தரப்பில் இந்த புறக்கணிப்பு நடவடிக்கை பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

அதே போல ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். இன்றைய முதல்நாள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட சிலருக்கு இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்படும் அந்த கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்