இது அது இல்லை… பாஜக எம்எல்ஏவை விசாரிக்க மறுக்கும் அமலாக்கத்துறை.!

Published by
மணிகண்டன்

Election2024 : நயினார் நாகேந்திரன் தொடர்புடைய 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் மறுத்துள்ளது அமலாக்கத்துறை.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் வாக்குப்பதிவு சமயம் வரையில் தேர்தல் பறக்குப்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை பாஜக வேட்பாளரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபரிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று நயினார் நாகேந்திரன் தரப்பு கூறினாலும், நயினார் நாகேந்திரன் பெயர் வழக்குப்பதிவில் குறிப்பிடப்பட்டது. அதே போல, நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்புடைய திமுக அலுவலகத்தில் 28 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யபட்டது. இதனையும் பிறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த இரு பண பறிமுதல் வழக்குக்களையும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக கருதி அமலாக்கத்துறை விசாரணை செய்ய வேண்டும் என நெல்லை சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான வழக்குகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்ற விதிகளின் கீழ் வராது எனவே, நாங்கள் அதனை விசாரிக்க முடியாது என அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.

இதனை அமலாக்கத்துறையினர் அறிக்கையாக தயார் செய்து நீதிமன்றத்தில் வரும் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

24 minutes ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

2 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago