தொடர் மழை எதிரொலி : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு

Default Image

அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறுகையில்,தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று தெரிவித்தது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணமே உள்ளது.இதனால் அம்மாவட்ட  ஆட்சியர் ரத்னா அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்