நிவர் புயல் கரையை தொட தொடங்கியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.எனவே கடலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது .தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகரும் நிவர் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அதிதீவிர புயலின் தீவிரம் இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் என்றும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என்றும்,அதன் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிவர் புயல் தற்போது அதிதீவிரமாக வலுப்பெற்று கரையை தொட தொடங்கியுள்ளதால் கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதிதீவிரமாக வீசும் புயலால் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.எனவே கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…