தமிழகத்தில் நாளை முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே,இந்த ‘இ-பதிவு’ பெற எப்படி விண்ணப்பிப்பது? என்று பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே திறக்க அனுமதி.ஆனால்,டீக்கடைகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து,நாளை முதல் திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்யவும் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே,அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு,’இ-பதிவு’ பெற ஆன்லைனில் https://eregister.tnega.org என்ற லிங்கை பயன்படுத்தி,தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ‘இ-பதிவு’ ரிஜிஸ்டர் செய்யவும்.அதன்பின்னர்,இந்த பதிவிற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து உடனடியாக மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும்.
மேலும்,இந்த ‘இ-பதிவு’ பெற மே 17 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…