தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ்.. அமைச்சர் தகவல்.!

Default Image

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுமையம் வருவதற்கு இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்  +1 தேர்வுகள் நடைபெறும் தேதியை அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்தார்.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல,  தேர்வு எழுத முடியாமல் போன +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்