DYFI மாநாடு நிறைவு….புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…..!!

Published by
Dinasuvadu desk
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு
  • புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி  பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் ,
தலைவர்கள் பேச்சு :
மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ,  DYFI-யின் அகில இந்திய தலைவர் முகம்மது ரியாஸ் , அகில இந்திய பொது செயலாளர் அவாய் முகர்ஜி  , த.மு.எ.க.ச மாநில தலைவர் சு.வெங்கடேசன் ,  DYFI-யின் மாநில தலைவர் எம்.செந்தில் , மாநில செயலாளர் எஸ்.பாலா , மாநில பொருளாளர் தீபா மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்  ரெஜிஸ்குமார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

வேலைவாய்ப்பு :
அதை தொடர்ந்து நேற்றும் , இன்றும் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாலிபர் சங்க தலைவர்கள் பங்கேற்ற பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின்  மக்கள் விரோத தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும்  இளைஞர்களின் வாழ்கை சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிறப்பு தீர்மானங்கள் : 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு  தீர்வு காணும் வகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து , குறிப்பாக ஸ்டெர்லைட் , ஜாதி ஆணவ படுகொலை , நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்கள் நலன் காக்க வழிவகை செய்யும் வகையில் , ஏராளமான சிறப்பு  தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு : 
அதில் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய  மாநில தலைவராக  ரெஜிஸ்குமாரும் , புதிய மாநில செயலாளராக பாலாவும் , புதிய மாநில பொருளாளராக  தீபா_வும் தேர்வு செய்யப்பட்டனர்.இதே போல 12 பேர் கொண்ட   புதிய மாநில செயற்குழுவும் , 81 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மக்களை கவர்ந்த மாநாடு :
இன்றய காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் , மதவாத சக்திகள் , இனவாத குழுக்கள் மற்றும் ஜாதிய வெறியர்கள் என தமிழகம் படும் சீரழிவை சுட்டிக்காட்டும் வகையில், அரசியல் திருப்புமுனை மாநாடாக  குறிப்பாக இளைஞர்கள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் மாநாடாக பார்க்கப்பட்டு சிவகங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
 
மேலும் செய்திகளுக்கு  dinasuvadu.com 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago