புரேவி, நிவரை தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதி “இரண்டு” புயல்கள்?

Default Image

தமிழகத்தில் புரேவி, நிவர் என இந்த இரண்டு புயல்களை தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி புதிதாக இரட்டை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான இந்த புரேவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது. இந்த ழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 6 மணிநேரத்தில் பாம்பன் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ராமநாதபுரம், பாம்பன் பகுதியில் பலத்த கற்று வீசி வருகிறது.

இதற்கு முன் நிவர் புயல் கரையை கடந்த பொது பெரியாவில் பாதிப்பை ஏற்ப்டுத்தவில்லை. ஆனால் பெரியளவில் மழை நீர் தேங்கி, ஏரி, குளங்கள் நிரம்பியது. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி அருகே மேலும் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது குறித்து டிசம்பர் 7 ஆம் தேதி தெரியவரும் என்றும், இதுகுறித்து தற்போது உறுதியாக எதுவும் கூட முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்