விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பலர் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரான டிடிவி தினகரன் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, வினைகளை தீர்த்து வெற்றிகளை தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று, உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும், மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். அதற்கு முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…